மனிதன் ஒருவன் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாது தனது குறிக்கோளை இலக்காகக் கொண்டு முயற்சித்தால் கற்பனைக் கதைகளில் மட்டுமே அது 'சாத்தியமாகும் என நம்பப்படுபவை கூட கைவசமாகும் என்பதற்கு முன்னுதாரணமாக உலகின் மிகப் பெரிய செல்வந்தரான'எலோன் மஸ்க்(Elon Musk)விளங்குகிறார்.
அதேசமயம் புத்தகங்களே உலகமென ஆழ்ந்து தன்னைச் சுற்றியுள்ள உறவுகள் தொடர்பில் அக்கறையில்லாமல் வாழ முயற்சிக்கும் ஒருவர் எவ்வாறு குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத் தழுவி தனிமையில் வாழ நேரிடும் என்பதற்கும் எடுத்துக்காட்டாக அவர் உள்ளார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
228 பில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கு உடைமையானவராக மாறி உலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருக்கும் எலோன் மஸ்க்(Elon Musk),குடும்ப வாழ்க்கையில் 3 முறை திருமணம் செய்து 10 பிள்ளைகளுக்கு தந்தையாகியும் எந்த உறவுமற்று நண்பர்களற்று தனித்து வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
Post a Comment