விசால சாம்ராஜ்யத்தில் நகரங்கள் எத்தனையோ இருந்தாலும் மகா நகரம் மற்ற நகரங்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விளங்கியது.ராஜ்யத்தின் மற்ற இடங்களில் பஞ்சம் தலை விரித்தாடும் சமயங்களில் கூட மகாநகரம் செழிப்பாக இருந்தது. மகாநகரத்தின் நகராட்சித் தலைவரான சங்கரனுடைய சிறப்பான நிர்வாகமே அந்த நகரத்தின் சிறப்புக்குக் காரணம் என்று பெரும்பாலோர் கருதினர்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய சங்கரன், மிக எளிய வாழ்க்கையே வாழ்ந்து வந்தான்.தனக்கென்று ஒதுக்கப்பட்ட மாளிகையைப் புறக்கணித்து ஒரு சாதாரண வீட்டில் வசித்து வந்தான்.நிர்வாக நேரம் தவிர,மற்ற நேரங்களில் எல்லாம் பொது மக்களுடன் நெருக்கமாகப் பழகி,அவர்களது குறைகளை நேரில் கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வும் அவ்வப்போது கண்டதால், பொது மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
அனைத்து மக்களின் அன்புக்குப் பாத்திரமாக இருந்த சங்கரனைப் பிடிக்காத ஒரு நபரும் அந்த நகரத்தில் உண்டு. அவன்தான் ராஜப்பிரியன்.அவன் மன்னருக்கு தூரத்து உறவினன். அவன் மனைவி ராணிப் பிரியா, பட்டத்தரசியின் தூரத்து உறவினள். ராஜப்பிரியனிடம் அளப்பரிய செல்வம் இருந்தும், சங்கரனைப் போல் புகழை அவனால் சம்பாதிக்க முடியவில்லை.இதனால் ராஜப்பிரியனுக்கு சங்கரன் மீது பொறாமை ஏற்பட்டது.
Post a Comment